Saturday 12 February 2011

ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்...


அப்பநென்பார்... 
அம்மையென்பார்...
சுற்றமென்பார்...
நட்பென்பார்...
நெருப்பென்பார்...
நீரென்பார்...
பஞ்ச பூதம் சாட்சியென்பார்...
அம்மி மிதித்திடுவார்...
அருந்ததியும் பார்த்திடுவார்...
காலநேரம் கழித்துக்கூட்டி; 
காமத்துக்கும் நாட்க்குறிப்பார்...
மாமியார் விடென்பார்...
மாமனார் சீரென்பார்...
மாப்பிள்ளை விருந்தென்பார்...
மைத்துனன் பரிசென்பார்...
கொழுந்தியாக் குசும்பென்பார்...
தாம்பத்திய உறவென்பார்...
பொண்டாட்டியே போதுமென்பார்...
பிள்ளைகுட்டி பெற்றிடுவார்...
இத்தனையும் கடந்த பின்னே;
இட்லி மாவு பிரச்சனைக்கு...
இனி அவள் வேண்டாமென
நீதிமன்றம் சென்றிடுவார்...
வெக்கமில்லா மனிதர்கள் பாரீர்...
உறவுகளை வெட்ட துடிக்கும்
விலங்குகள் பாரீர்...
விவாகரத்து எதற்கு?
இருமனங்கள் இணைந்துவிட்டால்
எந்த சட்டம் கேள்வி கேட்கும்?
உன்னோடு சகலமும்
பகிர்ந்துகொண்ட ஒருத்தியை பற்றி...
எவனிடமோ சொல்கிறாயே?
உன்னை சொல்லி திட்டுவது?
அல்லது விவாகரத்து சரிதானா?
 

No comments:

Post a Comment