Monday 14 February 2011

காதலர்கள் தோற்பதுண்டு - அனால் காதலென்றும் தோற்பதில்லை...


உன்னை போற்றாத
ஆளில்லை...
புகழாத பேரில்லை...
ஊற்றாக பெருக்கெடுத்து
நீ வரும்போது...
காற்றேது; கனலேது?
கரைபுரண்டு ஓடுமே;
காட்டாற்று வெள்ளம்போல...
கடவுள் மறுப்போரும் கூட - உன்னோடு 
கைகோர்த்து நடப்பாரே...
உன்னை நம்பித்தான்
இவ்வையமே வாழ்ந்திடுதோ?
உன்னை சுற்றித்தான்
இவ்வுலகமே சுற்றிடுதோ?
வள்ளுவன் தொடங்கி
வடநாட்டு புலவன் வரை...
எத்துனை பேர் உனக்கு
வெண்சாமரம் வீசினரோ?
பெற்றவர் தொடங்கி
உற்ற மாமன் வரை
எத்துனை பேர் உன்னை
வாய்விட்டு ஏசினரோ?
போற்றினாலும் தூற்றினாலும்...
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்...
புத்தம்புது பூவாய்
பூக்கும் உன் புன்சிரிப்பில்...
எத்தனை அழகு...
மொழிகடந்து இனம்கடந்து...
முழுமை நீ அடைந்த பின்னும்...
இளமை மாறாலும்
இன்னும் நீ 
இருப்பது எப்படியோ?
உனக்காக ஒருநாள்;
உலகமே கொண்டாடும்...
உன் பெயரை சொல்லி;
உணர்வுகள் திண்டாடும்...
வாழ்த்துக்கும்;
மகிழ்வுக்கும்;
உயிர்தந்த உன்னை
வாழ்த்த ஆளில்லை என்பதனால்?
என் வாழ்த்து...
"வாழ்க நீ பல்லாண்டு..
 பல்லாயிரத்தாண்டு...
பலகோடி நூற்றாண்டு..."

No comments:

Post a Comment