Wednesday 2 February 2011

கதைகதையாம்... காரணமாம்...

மக்கள் முகத்தில்
மட்டற்ற மகிழ்ச்சி...
எதிர்கட்சி ஆட்களுக்கு 
ஏகத்துக்கும் குளிர்ச்சி...

அனைத்திற்கும் காரணம்
ஆ.ராசா கைது...
அருமையான நாடகம்
அற்புதமான திரைக்கதை...

இது கலைஞரின்
எழுபத்தி ஆறாம் படைப்பு...
இளைஞனுக்கடுத்து
இவரின் முனைப்பு...

இத்தனை நாள்
கழித்து
ஏன் இந்த
நாடகம்?

சிந்தித்து 
பார்த்தேன்
சிரிப்புதான்
வருகிறது...

சி.பி.ஐ அதிரடியாம்...
தி.மு.க தடாலடியாம்...
அடப்பாவிகளா
சின்னப்புள்ள தனமா இல்ல?

இது தேர்தல்
வரும் காலம்...
இனி தென் சொட்ட
கதைகளும் வரும்...

கதைகளை ரசிக்க
கற்றுக்கொள்ளுங்கள்...
கன நேரமும் நம்பிவிடாதீர் - இந்த
கிழப்பயலை...

நம்பும்படி
கதை சொல்வான்...
நயவஞ்சக
நரிபோல...

நம்பியவர்
கழுத்தறுப்பான்
நயமாய்
பேசிக்கொண்டே...

மறந்தும்
நம்பிவிடாதீர் - இவன் 
மயக்கும்
வித்தைக்காரன்...

3 comments:

  1. ஹ ஹ ஹ ஹ சிரிப்பதா !? சிந்திப்பதா !? அருமை . எழுத்துப் பிழைகளை குறைக்க முயற்சிக்கவும் புரிதலுக்கு நன்றி

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி...
    தவறை திருத்திக்கொள்கிறேன்...
    தொடர்ந்து தருத்திடவும்...

    ReplyDelete