Friday 29 June 2012

முற்றத்து தாவரங்கள்...

நேற்று வரை
என் வரவிற்காக - அவை
காத்திருந்ததாகவும்;
அவ்வபோது
தலையசைத்து
என்னுடன் பேசுவதாகவும்
எண்ணிக்கொள்வேன்...

இன்புற்றிருக்கும்
மனிதனைப் பார்த்தால்
எப்படித்தொன்றுமோ
இயற்கைக்கு?

முந்தாநாள்
மாலைப் பொழுதில்
முற்றத்தை நிரப்பிய மழை - சற்று
மகிழ்ச்சியை தந்தாலும்!

எங்களுக்குள் ஏற்பட்ட
இடைவெளியையும் - அதை
ஏற்படுத்திய இம்மழையையும்
வெறுக்கவே செய்கிறேன்?

இப்போது
நன்கு புரிகிறது!
மகனுக்குத் திருமணம் முடித்த
ஓர் தாயின் வேதனை...

No comments:

Post a Comment